ஆலயத் திருவிழாவில் துப்பாக்கி சூடு! வன்மையாக கண்டிக்கிறேன் – பாப்பா ராயுடு

ஷா ஆலம், செப் 3-
பெஸ்தாரி ஜெயாவில் உள்ள இந்து ஆலயத்தில் நடைபெற்ற திருவிழாவில் துப்பாக்கி சூடு சம்பவத்தை மிகவும் வன்மையாக கண்டிப்பதாக சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராயுடு தெரிவித்தார்.

ஒரு பண்டிகை விழாவில் பொறுப்பற்ற முறையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதை நான் மிகவும் தீவிரமாகப் பார்க்கிறேன்.

இந்து நம்பிக்கை அமைதி, நல்லிணக்கம் மற்றும் மனிதகுலத்தின் உயர்ந்த மதிப்புகளை இது சீர்குலைக்கும் வகையில் உள்ளது.

எனவே, மதக் கொண்டாட்டங்களில் எந்த வகையான வன்முறையும் இருக்கக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன். இந்தச் செயலை அனைவரும் வண்மையாகக் கண்டிக்க வேண்டும்.

சிலாங்கூர் மாநிலத்தின் எந்தப் பகுதியிலோ அல்லது நாடு முழுவதிலுமோ இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க வேண்டும்.

ஆக இது தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்வதற்கும், சோதனைகள் நடத்துவதற்கும் போலிஸ் அதிகாரிகளுக்கு எனது முழு ஆதரவையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பாப்பா ராயுடு தமது அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles