மடாணி அரவனைப்பு கொள்கையால் எதிர்க்கட்சிகளும் உந்தப்படுகிறது!

பெட்டாலிங் ஜெயா செப் 22 ;- மடாணி அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வையினால் வாக்காளர்களில் ஒரு பகுதி மக்கள் மீது மட்டுமே   கவனம் செலுத்துவதற்கு பதிலாக அனைத்து இனங்களையும் கவனிக்க பெரிக்காத்தான் நேஷனல் கட்டாயப் படுத்தப் படுகிறது  என்று பி. கே. ஆர் துணைத் தலைவர் ஆர். ரமணன் கூறுகிறார்.

சுங்கை பூலோ எம். பி., எந்த இனம் அல்லது குழுவோ ஓரங்கட்டப் படாமல், அனைவரின் உள்ளடக்கத்திற்கும் மடாணி அரசாங்கம் முக்கியத்துவம் அளிப்பது  போல், பாஸ் போன்ற கட்சிகளும் குறிப்பாக இந்திய சமூகத்தை அணுகுவதற்கான காரணமாகியுள்ளது என்று கூறினார்.

“முன்னர் இந்திய சமூகத்தை (அதன் அணுகுமுறையில்) குறிப்பிடாத பாஸ் கட்சி, அதன் அணுகுமுறையை மாற்றிக் கொண்டுள்ளது. (இப்போது அவர்கள்) இந்திய சமூகத்தை  கவனித்துக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறார்கள். அவர்கள் இந்திய சமூகத் தலைவர்கள் தலைமையிலான கட்சிகளிடமிருந்து கூட்டாளிகளை தேடுகிறார்கள். 

“ஏனென்றால் அதுவே மடாணியின் பலம். மடாணி அனைவருக்கும் பொருந்தும். இது அனைத்து இனக்குழுக்களிடையேயும் ஒற்றுமைக்கான  அடித்தளம் “என்று பெர்னாமாவிடம்  அவர் கூறினார்.

உரிமை மற்றும் மலேசிய முன்னேற்றக் கட்சி போன்ற கட்சிகளை உள்ளடக்கிய பெரிக்காத்தானின் தளர்வான எதிர்க்கட்சி கூட்டணி இப்பொழுது ம.இ.கா போன்றவற்றுக்கு வலை விரிப்பது குறித்து  அவர் கருத்து தெரிவித்தார்.

ம.சீ.ச மற்றும் ம.இ.கா ஆகியவற்றுடன் முறைசாரா விவாதங்களையும் பிஎன் நடத்தியுள்ளது, இவை இரண்டும் ஆளும் பாரிசன் நேஷனல் கூட்டணியில் தங்கள் எதிர்காலம் குறித்து பரிசீலித்து வருகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles