தமிழ் – சீனம் – தேசிய பள்ளி ஆசிரியர்களுக்குடிஜிட்டல் AI கல்வியாளர் பயிற்சி பட்டறை சிறப்பாக நடைபெற்றது!

கோலாலம்பூர் அக் 5-
தமிழ்ப் பள்ளி ஆசிரியர்கள், சீனம் மற்றும் தேசிய பள்ளி ஆசிரியர்களுக்கான செயற்கை நுண்ணறிவு பயிற்சி பட்டறை நேற்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

நாட்டில் புகழ்பெற்ற Blues Brothers Welfare Association Malaysia ஆதரவோடு நேற்று காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை Basic 8, Lorong 19/1a, Seksyen 19, Petaling Jaya 46300 Selangor என்ற இடத்தில் நடைபெற்ற பயிற்சி பட்டறையில் 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Arutsothy Annamalai இந்த பயிற்சி பட்டறையை சிறப்பாக வழி நட்தினார் என்று Blues Brothers Welfare Association Malaysia இளைஞர் அணி தலைவர் YBhg. Datuk Dr. M. Shankar தெரிவித்தார்.

ஆசிரியர்களுக்கு காலை உணவு, மதிய உணவு மற்றும் மாலை தேநீர் வழங்கப்பட்டது. எங்கள் அரசு சாரா நிறுவனம் பள்ளி ஆசிரியர்களுக்கு (SJK, SJK(T), SJK(C) & SMK) ஒரு AI திட்டத்தை ஏற்பாடு செய்தது. இந்த வாய்ப்பை ஆசிரியர்கள் நல்ல முறையில் பயன் படுத்தி கொண்டனர்.

வரும் அக்டோபர் 11 ஆம் தேதியும் இதே இடத்தில் இரண்டாவது பயிற்சி பட்டறை நடத்தப்படும் என்று அவர் சொன்னார்.

Blues Brothers Welfare Association Malaysia ஏற்பாட்டில் ஆசிரியர்களுக்காக நடத்தப்பட்ட முதல் பயிற்சி பட்டறை பெரும் வரவேற்பைப் பெற்றது என்று அதன் தலைவர் Samad தெரிவித்தார்.

முற்றிலும் இலவசமாக நடத்தப்பட்ட இந்த செயற்கை நுண்ணறிவு பயிற்சி பட்டறையில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு நல்ல பயனுள்ள பட்டையாக விளங்கியது என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles