47வது ஆசியான் உச்சி மாநாடு- இந்தியா பிரதமர் நரேந்திர மோடி இணைய வழியாக பங்கேற்பார்!

கோலாலம்பூர், அக் 23 — இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தமது நாட்டில் தீபாவளி கொண்டாட்டங்கள் நடைபெறுவதால், 47வது ஆசியான் உச்சநிலை மாநாட்டுக்கு இணையவழி முறையில் பங்கேற்பார் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

“மோடி நேற்று இரவு எனக்கு தொலைபேசியில் அழைப்பு வழங்கி இதை தெரிவித்தார். அவரது முடிவை நான் மதிக்கிறேன் மேலும் அவருக்கும் இந்திய நாட்டு மக்களுக்கு எனது தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்,” என்று இன்று தனது முகநூல் பதிவில் அன்வார் கூறினார்.

அன்வார் மேலும் கூறியதாவது, தாம் மற்றும் மோடி மலேசியா–இந்தியா இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்தி, விரிவான நிலைக்கு கொண்டு செல்வது குறித்து விவாதித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தியா, வர்த்தகம் மற்றும் முதலீட்டில் மலேசியாவுடன் நண்பர்களாக இருந்து வருகிறது. தொழில்நுட்பம், கல்வி மற்றும் பிராந்திய பாதுகாப்பு துறைகளிலும் இரு நாடுகளுக்கு இடையில் நெருக்கமான ஒத்துழைப்பு உள்ளது.

மலேசியா–இந்தியா உறவை மேலும் வலுப்படுத்தவும், ஆசியான்–இந்தியா ஒத்துழைப்பை அமைதியும் செழிப்பும் நிறைந்த பிராந்தியத்துக்காக உயர்த்தவும் உறுதியாக செயல்படும் என்று அன்வார் கூறினார். 47வது ஆசியான் உச்சநிலை மாநாடு மற்றும் தொடர்புடைய மாநாடுகள் அக்டோபர் 26 முதல் 28 வரை கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் நடைபெறவுள்ளது.

bernama

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles