மலேசியா 2030க்குள் ஒரு ஏ.ஐ நாடாக மாறும்: அமைச்சர் கோபிந்த் சிங் டியோ நம்பிக்கை

கோலாலம்பூர், நவ 21- செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் பெரிய முதலீடுகள் மற்றும் விரிவான டிஜிட்டல் கொள்கைகளைச் செயல்படுத்துவதன் மூலம், 2030 ஆம் ஆண்டுக்குள் மலேசியாவை ஒரு AI நாடாக மாற்றுவதற்கான முயற்சிகளை அரசாங்கம் விரைவுபடுத்துகிறது

இதனை டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார். 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள நிதி மற்றும் தேசிய செயற்கை நுண்ணறிவு அலுவலகம் (NAIO) நிறுவப்பட்டதன் மூலம் AI மேம்பாட்டிற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு தெளிவாகிறது என்று அவர் கூறினார்.

“மலாய் அரசாங்கம் AI-இன் பொருளாதாரத் திறனை முழுமையாக உணர்ந்துள்ளது. இது சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2026 வரவு செலவுத் திட்டம் உட்பட எங்கள் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் பிரதிபலிக்கிறது,” என்று மலேசிய பிரிட்டிஷ் வர்த்தக சபை (BMCC) ஏற்பாடு செய்த ஆறாவது BMCC வணிகச் சிறப்பு விருதுகள் விழாவில் அவர் உரையாற்றினார்.

பொதுச் சமூகம் மற்றும் வணிகச் சமூகம் இரண்டையும் உள்ளடக்கிய பல்வேறு AI திட்டங்கள் நாட்டின் டிஜிட்டல் சூழலை வலுப்படுத்தச் செயல்படுத்தப்பட்டுள்ளன என்றும், “இது மலேசியாவை ஒரு டிஜிட்டல் நாடாக மாற்றுவதற்கும், அதன் மூலம் 2030க்குள் AI நாட்டின் நிலையை அடைவதற்கும் ஒரு நடவடிக்கையாகும்,” என்றும் கோபிந்த் மேலும் கூறினார்.

மலேசியாவை ஆசியான் பிராந்தியத்தில் டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஒரு மூலோபாய மையமாகக் கருதுமாறு சர்வதேச நிறுவனங்களை அவர் அழைத்தார்.

ஆசியான் மத்திய பகுதியில் ஒரு மேம்பட்ட, நிலையான மற்றும் பன்முக கலாச்சார டிஜிட்டல் தளத்தில் மலேசியா மூலோபாய ரீதியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது என்றும், இந்த ஆண்டின் இறுதிக்குள் நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (KDNK) 25.5% பங்களிக்கும் பாதையில் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles