
மக்களிடையே நல்லிணக்கத்தைக் குழைக்கும் செயற்கை நுண்ணறிவு தவறாகப் பயன்பாடுகளை அரசாங்கம் கடுமையாகக் கருதுவதாகவும், அதற்குத் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ நாடாளுமன்றத்தில் பதிவு செய்தார்.
சமூகத்தினரிடையே நல்லிணக்கத்தைப் பேணுவதற்காக, குறிப்பாக பொதுத் தேர்தல் காலத்திற்கு முன்னதாக, மக்களைக் குழப்புவதோடு, சமுதாய ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாக விளங்கும் வகையில் , செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்துவதை அரசாங்கம் கடுமையாகக் கருதுகிறது.
இந்தத் தவறான செயல்பாடுகளை ஏதிர்கொள்ளவும், இதுபோன்ற சிக்கல்களைச் சமாளிக்கவும், மேம்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI) சட்டம் , உள்ளடக்கக் கண்காணிப்பு மற்றும் இது தொடர்பான பொது விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கிய பல அணுகுமுறையை அரசாங்கம் செயல்படுத்தியுள்ளது.
அதோடு, செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாடு தொடர்பான சிறப்பு சட்ட மசோதாவை இலக்கவியல் அமைச்சு திட்டமிடும் வேளையில், செயற்கை நுண்ணறிவு (AI) அரசியலமைப்புச் சட்டத்தை இயக்கவும், செயற்கை நுண்ணறிவு (AI) சம்பந்தப்பட்ட அனைத்து தரப்புகளையும் உள்படுத்திய வரைவு சட்டங்களை செயல்படுத்துவதை கண்காணிக்கவும் சிறப்பு செயற்குழுவை இலக்கவியல் அமைச்சு உருவாக்கியுள்ளது
2024 சைபர் பாதுகாப்பு சட்டம், 2024 தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டம் (திருத்தம்), மற்றும் 2024 ஆன்லைன் பாதுகாப்பு சட்டம் ஆகியவற்றின் வழி தற்போதைய சட்டங்களும் வலுப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், தேசிய சைபர் பாதுகாப்பு நிறுவனம் (NACSA), பழைய 1997 கணினி பாதுகாப்பு சட்டத்திற்கு பதிலாக, புதிய சைபர் பாதுகாப்புச் சட்ட மசோதாவையும் உருவாக்கி வருகிறது.
இணைய உள்ளடக்கக் கண்காணிப்பு துறையில், மலேசிய தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா ஆணையம் (MCMC), 1998 தொடர்பு மற்றும் மல்டிமீடியா சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, போலித் தகவல்களைப் பரப்புதல், தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களைப் பரப்புதல், மற்றும் deepfake போன்ற தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்தப்படுவதை கண்டறிந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
குறிப்பாக பொதுத் தேர்தல் காலம் நெருங்கும் நிலையில், தவறான தகவல்களைப் பரப்புதல், மற்றும் பொதுமக்களின் கருத்துகளை தவறாகச் சித்தரித்து, குழப்பும் அபாயம் அதிகரிப்பதால், இந்தக் கண்காணிப்பு மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது என்று தம்பீன் நாடாளுமன்ற உருப்பினர், டத்தோ முகமட் இசாம் பின் முகமட் எழுப்பிய கேள்விக்கு கோபிந்த் சிங் டியோ மேற்கண்டவாறு பதிலளித்தார்.

