நிர்வாக சீர்த்திருத்தம் உடனடியாக அமல்படுத்த வேண்டும்- நம்பிக்கை கூட்டணி தலைமைத்துவ மன்றத்தில் தகவல்

பெட்டாலிங் ஜெயா, டிச 10- பக்கத்தான் ஹராப்பான் தலைவர்கள் மன்றக் கூட்டம், நிறுவன சீர்திருத்த முயற்சிகளுக்கு முன்னுரிமை அளித்து, அவற்றை விரைவில் மேலும் கடுமையாகச் செயல்படுத்த ஒப்புக்கொண்டது.

நம்பிக்கை கூட்டணி தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், நாட்டின் மூன்று ஆண்டு நிர்வாகத்தில், நல்லாட்சி, மக்களின் பொருளாதார வளர்ச்சி, தேர்தல் அறிக்கை அமலாக்கம் மற்றும் நிறுவன சீர்திருத்த முயற்சிகள் தொடர்பான விவகாரங்கள் விவாதிக்கப்பட்டதாக நம்பிக்கை கூட்டணி தொடர்பு இயக்குநர் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.

சபா மாநிலத் தேர்தல் (பிஆர்என் சபா) முடிவுகளையும் இக்கூட்டம் ஆழமாக ஆராய்ந்ததுடன், நிறுவன சீர்திருத்தங்கள் தொடர்பான சில விஷயங்களுக்கு முன்னுரிமை அளித்து, அவற்றை விரைவில் மேலும் கடுமையாகச் செயல்படுத்த வேண்டும் என்றும் முடிவு செய்தது.

“சீர்திருத்த முயற்சிகளின் முன்னுரிமை மற்றும் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான நாட்டின் திசையை நிர்ணயிக்கும் வகையில், 2026ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் பிஎச் மாநாடு நடத்தவும் இக்கூட்டம் முடிவு செய்தது,” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles