உயர்கல்வி நிதி உதவி: பி40 இந்திய மாணவர்களுக்கு மார்ச் மாதம் விண்ணப்பம் திறப்பு

ஷா ஆலம், டிசம்பர் 8- சிலாங்கூர் அரசு, பி40 பிரிவைச் சேர்ந்த இந்திய மாணவர்களுக்கான உயர்கல்வி கட்டண உதவித் திட்டத்திற்கான விண்ணப்பங்களைத் மார்ச் 2 முதல் மார்ச் 13 வரை திறக்கும்.

இந்த உதவி சம்பந்தப்பட்ட உயர்கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்கு ஒருமுறை வழங்கப்படும் என்று சிலாங்கூர் மாநில மனிதவளம், மற்றும் வறுமை ஒழிப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பாராய்டு கூறினார். இளங்கலை பட்டப்படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு ஒருமுறை RM3,000 வழங்கப்படும், அதேவேளையில் டிப்ளோமா மாணவர்களுக்கு RM2,000 வழங்கப்படும் என்று அவர் கூறினார்.

தகுதியுள்ள மாணவர்கள் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு வரை காத்திருக்காமல் உடனடியாக விண்ணப்பிக்குமாறு அவர் வலியுறுத்தினார். இதற்கிடையில், இந்த ஆண்டுக்கான மாநிலக் கல்வி பட்ஜெட்டை அதிகரிக்க ஒப்புதல் அளித்த மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரிக்கு அவர் தனது நன்றியைத் தெரிவித்தார்.

இந்த அதிகரிப்பைத் தொடர்ந்து, பள்ளிப் பேருந்து ஒதுக்கீடு RM1.2 மில்லியனாக உயர்த்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் உயர்கல்வி கட்டண உதவி RM1.5 மில்லியனாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது தேவைப்படும் பிரிவினருக்குக் கல்வி அணுகலை மேம்படுத்துவதில் மாநில அரசின் உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கிறது என்று அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles