சிலாங்கூர் ஆட்சிக்குழூ உறுப்பினர் மன்னிப்பு கேட்க வேண்டும்! இல்லையெனில் வழக்கு தொடுக்கப்படும் – டான்ஸ்ரீ நடராஜா

கோலாலம்பூர் ஜன 9-
பத்துமலை திரு முருகன் திருத்தலம் பொது சொத்து. தனிநபருக்கு சொந்தமானது அல்ல என்று
கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் டான்ஸ்ரீ ஆர். நடராஜா இன்று தெரிவித்தார்.

பத்துமலையில் நிர்மாணிக்கப்படவிருக்கும் மின் படிக்கட்டு விவகாரம் தற்போது நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

குறிப்பாக சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பாராயுடு செய்தியாளர்களிடம் பேசியது எங்களுக்கு பெரும் அதிருப்தியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

உண்மை தெரியாமல் அவர் பேசியிருப்பது எனக்கு பெரும் மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். இதன் அடிப்படையில் அவருக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கறிஞர் நோட்டீஸ்க்கு அவர் 7 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும். இல்லையென்றால் அவர் மீது வழக்கு தொடரப்படும்.

மேலும் இவ்விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால் அது குறித்து நான் அதிகம் பேச விரும்பவில்லை என்று இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles