
தம்பூன், ஜன 21-
உயர் கல்வி
பட்டப்படிப்பு முடியும் வரை அனைத்து கல்வி நிதியுதவியை தம்பூன் நாடாளுமன்ற மக்கள் சேவை மையம் ஏற்றுக் கொண்டுள்ளது மிகவும் பாராட்டுக்குரியது.
OUM எனப்படும் பொது பல்கலைக்கழகத்தில் எந்தவொரு படிப்பதற்கான சலுகைக் கடிதத்தை நேற்று வழங்கியதாக தம்பூன் நாடாளுமன்ற மக்கள் சேவை மையத்தின் இந்திய பிரதிநிதி டத்தோ சுரேஸ் குமார் தெரிவித்தார்.
3 இளங்கலை பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் 2 டிப்ளமோ மாணவர்கள். அவர்கள் அனைவரும் தம்புன் நாடாளுமன்றத்தில் வசிக்கும் B40 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.
தம்புன் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களுக்கு சம்பந்தப்பட்ட மாணவர்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

