ஐபிஎப் கட்சியின் முக்கிய பதவிகளுக்கு போட்டியிடுகின்றவர்கள் சட்டவிதிகளை கடைபிடிக்க வேண்டும்,
செயலாளர் மோகன் வேண்டுகோள்

ஐபிஎப் கட்சி ஒரு ஜனநாயக கட்சி. கட்சி தலைமை பொறுப்பிற்கு அனைவரும் போட்டியிடலாம். அது அவர்களின் உரிமை. இருந்தப்போதிலும் கட்சிக்கென்று சட்டவிதிமுறைகள் உள்ளன. அதனை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டுமாறு ஐ பி.எப் தலைமை செயலாளர் மோகன் கேட்டுக் கொண்டார்.

தேசியத்தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் கட்டாயம் தொகுதி தலைவராக இருத்தல் அவசியம்.

அவர் 20 தொகுதிகள் ஆதரவு பெற்றிருக்க வேண்டும்.

துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் 15 தொகுதிகள் ஆதரவை பெற்றிருக்க வேண்டும்.

5 தேசிய உதவித்தலைவர்கள் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் 10 தொகுதிகளின் ஆதரவை பெற்றிருக்க வேண்டும்.

தேசிய மத்திய செயலவைக்கு போட்டியிடும் நபர்கள் கட்சி உறுப்பினராக குறைந்தது 5 ஆண்டுகள் இருத்தல் வேண்டும். கேறைந்தது 5 தொகுதிகளின் ஆதரவை பெற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

விரைவில் ஐபிஎப் கட்சியின் 30 ஆவது தேசியப் பேராளர் மாநாடு மிகப்பெரிய அளவில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles