கமல்ஹாசன் ஆற்றிய உரைக்கு பாராட்டு தெரிவித்த கவிஞர் வைரமுத்து!

“அன்புள்ள
கமல் எம்.பி அவர்களே!

கன்னிப் பேச்சல்ல;
காளைப் பேச்சு

ஒரு தேசியவாதியின் மொழி
ஆனால்,
தமிழச் சாதியின் குரல்

நாடாளுமன்றமே
நிமிர்ந்து அமர்ந்தது
தாடிச் சிங்கத்தின்
தமிழ் கேட்டும்;
ஆங்கிலம் கேட்டும்

என்னையறியாமல்
மீசை முறுக்கின
என் கட்டை விரலும்
சுட்டு விரலும்

காடு அதிரட்டும்
களிறே பிளிறு”

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles