செயற்கை நுண்ணறிவு வடிவில் ஆபாச உள்ளடக்கங்களைக் கட்டுப்படுத்த அரசாங்கம் ஆய்வு – தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் தகவல்

கோலாலம்பூர், பிப் 9: மின்னிலக்கத் தளங்கள் வழியாக அருவருப்பான உள்ளடக்கங்கள் மற்றும் தீவிரவாதச் செய்திகள் பரவுவது குறித்த கவலைகளை அடுத்து, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது.

தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ பாஹ்மி ஃபட்சில் கூறுகையில், செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு மிகவும் கட்டுப்பாடாகவும் பொறுப்புணர்வுடனும் இருப்பதை உறுதிசெய்ய, ஒரு சிறப்புச் சட்டத்தை உருவாக்குவதில் தனது தரப்பு கவனம் செலுத்துவதாகவும், வலையமைப்பைத் தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் எதிர்மறையான உள்ளடக்கங்கள் தற்போது முக்கியக் கவனத்தில் உள்ளதாகவும் கூறினார்.

“தற்போது, செயற்கை நுண்ணறிவுச் செயலிகளுக்கு மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (MCMC) இன்னும் உரிமம் வழங்கவில்லை. அதைச் செயல்படுத்தும் அதிகாரம் எங்களிடம் உள்ளது, ஆனால் அது தொடர்பான ஆய்வுகள் இன்னும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.”

“தற்போதைய குற்றங்கள் வலையமைப்பைத் தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் அருவருப்பான, தீவிரவாத உள்ளடக்கங்களை அனுப்புதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றன,” என்று அவர் இன்று இங்குள்ள தாமான் தாசிக் தித்திவாங்சாவில் 2026ஆம் ஆண்டுக்கான இணையப் பாதுகாப்பு தினத்தை தொடக்கி வைத்த பின்னர் கூறினார்.

தவறான பயன்பாட்டின் அபாயங்களைக் கட்டுப்படுத்தவும், மின்னிலக்கப் பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அதிகாரிகளிடமிருந்து பரிந்துரைகள் வந்தால், செயற்கை நுண்ணறிவுச் செயலிகளுக்கு உரிமம் வழங்குவதன் அவசியத்தையும் அரசாங்கம் மதிப்பிடும் என்று அவர் மேலும் கூறினார்.

Bernama

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles