அரசாங்கம் செயல்படுத்திய பூடி95 இலக்கு மாணியத் திட்டம் 85 விழுக்காடு மக்களைப் பாதுகாத்தன- பிரதமர் அன்வார்

கோலாலம்பூர், பிப். 12: உலக வங்கி மற்றும் சில பொருளாதார நிபுணர்களின் பரிந்துரையான விலை மிதவைக் கொள்கையை அரசாங்கம் நிராகரித்துவிட்டது, ஏனெனில் அது பெரும்பான்மையான மக்களுக்குச் சுமையாக அமையும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

மாறாக, அரசாங்கம் செயல்படுத்திய இலக்கு மானியத் திட்டம் 85 விழுக்காடு மக்களைப் பாதுகாத்ததோடு, பெட்ரோலுக்கு RM6 பில்லியனையும் டீசலுக்கு RM5 பில்லியனையும் சேமித்துள்ளதாக நிதி அமைச்சருமான அன்வார் குறிப்பிட்டார்.

எரிபொருள் பயன்பாடு தொடர்ந்து மக்களுக்கு பயனளிப்பதை உறுதி செய்வதற்காக, BUDI95 விலையை ஒரு லிட்டருக்கு RM1.99 என அரசாங்கம் நிர்ணயித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

BUDI95 செயல்படுத்தப்பட்ட பிறகு, ஒட்டுமொத்த கசிவுகள் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், இன்னும் சில சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டு வருவதாக அவர் ஒப்புக்கொண்டார்.

“ரந்தாவ் பாஞ்சாங், தாவாவ் மற்றும் பெர்லிஸ் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் உள்ள சில பெட்ரோல் நிலையங்களில் சந்தேகத்திற்கிடமான பயன்பாட்டு முறைகள் இன்னும் கண்டறியப்பட்டுள்ளன.”

“இந்த மூன்று பகுதிகளில்தான் அதிக கசிவுகள் பதிவாகியுள்ளன. வருவாய் இழப்பைத் தடுப்பதற்காக, இப்போது அந்தப் பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் அமலாக்கம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.

Bernama

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles