மலேசிய திராவிட கழகத்தின் ஏற்பாட்டில் தமிழ் புத்தாண்டு பொங்கல் விழா!

தை பிறக்கும் முதல் நாளே தமிழர் புத்தாண்டு என மலேசிய திராவிட கழகத்தின் தேசிய பொதுச் செயலாளர் பொன்.பொன்வாசகம் கூறினார்.

இந்த நாளை தமிழர்கள் அனைவரும் குடும்பத்தாருடன் ஒற்றுமையாக மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும்.

தமிழ் புத்தாண்டு தொடர்பில் பல சர்ச்சைகள் எழுந்தாலும் தமிழர்களாகிய நாம் தை முதல் நாளேயே தமிழ் புத்தாண்டாக கொண்டாடி அதனை அடுத்த தலைமுறையினர் வரையில் கொண்டுச் சேர்க்க  வேண்டும். எதற்காகவும் யாருக்காகவும் இதனை நாம் விட்டு கொடுக்க கூடாது.

குறிப்பாக, தை முதல் நாளில் கொண்டாடப்படும் பொங்கல் விழா தமிழர்கள் மட்டுமல்லாது ஒட்டு மொத்த மலேசியர்களின் விழாவாக கொண்டாடப்பட வேண்டும். மூவினத்தவர்களும் பொங்கல் வைத்து மகிழ்ந்து புத்தாண்டை வரவேற்க வேண்டும் என மலேசிய திராவிட கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற தமிழ் புத்தாண்டு பொங்கல் விழாவில் பேசிய பொன்வாசகம் வலியுறுத்தினார்.

ஷா ஆலம் டாலியா மண்டபத்தில் நடைபெற்ற இவ்விழாவை அத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹஜி அஸ்லி பின் யூசோப் கலந்து கொண்டு தொடக்கி வைத்தார்.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளுடன் சிறுவர்களுக்கென சிறப்பு போட்டிகள் நடத்தப்பட்டு பங்கேற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

மேலும், பொங்கல் திருநாளன்று பொது விடுமுறை வழங்கப்பட வேண்டும் என நீண்ட காலமாக கழகம் முன்னெடுத்து வந்த தீர்மானம் மீண்டும் இவ்விழா மூலம் கொண்டு வரப்பட்டது.

இவ்விழாவில் கோலாலம்பூர் உட்பட கெடா, பினாங்கு, பேராக், மலாக்கா ஆகிய மாநிலங்களில் இருந்து 250க்கும் அதிகமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles