டாக்டர் இராமசாமியின்
கோரிக்கை
மிகவும் நியாயமானது!
பாசிர் கூடாங் எம்.பி. கூறுகிறார்

பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி இராமசாமி எந்த நேரத்திலும் இனப் பிரச்சினையை எழுப்பவில்லை.

அவர் பொது சேவைத் துறையில் சீர்திருத்தங்களைக் கேட்கிறார்.

அது நியாயமான மற்றும் நாகரீகமான மலேசிய நாட்டிற்கு நியாயமானதாகவும், சமநிலையானதாகவும் இருக்கிறது என்று பாசிர் கூடாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹசான் கரீம் தெரிவித்தார்.

பினாங்கு துணை முதலமைச்சர் டாக்டர் ராமசாமி பொதுச் சேவைத் துறை பற்றி கூறியதை சிலர் சாடினாலும் அவரை தற்காத்து இவர் பேசியுள்ளார்.

மலாய்க்காரர்கள் ஆதிக்கம் செலுத்தும் பொதுச் சேவைத் துறையை சீர்திருத்த வேண்டும் என்ற ராமசாமியின் அழைப்பால் மலாய்க்காரர் என்ற முறையில் தனக்கு அச்சுறுத்தல் இல்லை.

பேராசிரியர் டாக்டர் ராமசாமி பல்கலைக்கழக விரிவுரையாளராக இருந்து நீண்ட காலமாக சேவையாற்றினார்.

இந்த விவகாரத்தை பிரதமர் அன்வார் இப்ராகிமின் கவனத்திற்கு கொண்டு செல்வதே அவரது நல்ல எண்ணம்.

டாக்டர் ராமசாமி இனப் பிரச்சினைகளை எழுப்பவில்லை.

இந்த நாட்டில் மலாய்க்காரர்கள் அல்லாதவர்களின் நீதிக்கு பேசும் டாக்டர் ராமசாமி போராட்டத்தை மதிக்க வேண்டும் என்று அவர் கூறுகிறா

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles