தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் ஆறு மாநில அங்கத்தினர் வாரிய கூட்டங்கள்!

கோலாலம்பூர் பிப் 26-
தேசிய நிலநிதி கூட்டுறவு கழகத்தின்
ஜோகூர், மலாக்கா- பகாங்- கிளந்தான், திரங்கானு – பேரா ஆகிய மாநில அங்கத்தினர்கள் கீழ்கண்ட வாரியக் கூட்டங்களில் கலந்து கொள்ளவதற்கான செய்தி இதன்வழி அறிவிக்கப்படுகிறது

தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் அங்கத்தினர்களுக்கான வட்டாரப் பொதுக்கூட்டம் மாநில வாரியாக நடைபெறவிருப்பதாக சங்கத்தின் செயலாளர் டத்தோ பா. சகாதேவன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

ஜோகூர் மாநில வட்டாரப் பொதுக்கூட்டம் ஜாலான் மெங்கிபோல், குளுவாங், ஜோகூர் எனும் முகவரியில் அமைந்துள்ள இந்தியர் சங்க மண்டபத்தில் 28.2.2026ம் தேதி சனிக்கிழமை 4.30 மணி அளவிலும்

மலாக்கா மாநில வட்டாரப் பொதுக்கூட்டம் 1.3.2026ம் தேதி ஞாயிற்றுக்கிழமை KM-23, ஜாலான் பத்து 14, பெம்பான் மலாக்கா எனும் முகவரியில் அமைந்துள்ள தேவி ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய மண்டபத்தில் மாலை 4.30 மணிக்கும்

பகாங் -கிளந்தான் – திரங்கானு ஆகிய மாநிலங்களின் வட்டாரப் பொதுக்கூட்டம் 5.3.2026 ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு கேமரன் மலை கம்போங் ராஜா, புளுவேலி எனும் முகவரியில் அமைந்துள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் மண்டபத்தில் நடைபெறும்.

பேரா வட்டாரப் பொதுக்கூட்டம் 6.3.2026 ஆம் தேதி, வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு லோட் எண்: ஜாலான் 4890 N, ஜாலான் கொம்ளக்ஸ் சுக்கான், ஈப்போ, பேராக் எனும் முகவரியில் அமைந்துள்ள (ஸ்டேடியம் பேராக் அருகில்) மண்டபத்திலும் நடைபெறும்.

தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் துணை சட்டவிதிகளின் பிரிவு 15ன் கீழ், 2025ம் ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் நாள் அல்லது அதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட அங்கத்தினர்கள் மட்டுமே இந்த வட்டாரப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளமுடியும் என்பதும் இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.

மேற்கண்ட தகுதிகளைப்பெற்றுள்ள அங்கத்தினர்கள் தவறாமல் குறிப்பிட்ட நேரத்திற்குள் வட்டார பொதுக்கூட்டத்தில் வந்து கலந்து கொள்ளும்படி தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் செயலாளரும் – நிர்வாக இயக்குநருமான டத்தோ பா சகாதேவன் இதன் மூலம் அறிவித்துக் கொள்கிறார்.

(குறிப்பு: அங்கத்தினர்கள் மறக்காமல் தங்களது அடையாள அட்டையை கொண்டு வரவும்)

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles