
பாகான் டத்தோ பிப் -27
என் அரசியல் மற்றும் பொது வாழ்க்கையில் நான் எப்போதும் மக்களிடத்தில் பாகுபாடு காட்டியதே இல்லை என டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி மனம் திறந்து பேசினார்.
இன்று தனது பாகான் டத்தோ நாடாளுமன்ற தொகுதியில் 1000 இந்திய மாணவர்களுக்கு கல்வி நிதி வழங்கிய டத்தோ ஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி இது என் கடமை என்றார்.
அதோடு என் பொது வாழ்க்கையில் நான் கடை பிடிக்கும் ஒரே விஷயம் நான் இன மத பாகுபாடு பார்க்கமாட்டேன்.
என்னை பொறுத்தவரை , எனக்கு எல்லாரும் சமம் எல்லோருடைய உரிமையும் பாதுகாக்கப்பட வேண்டும். அதோடு எல்லாருக்கும் அடிப்படை வசதி, தேவையான உதவி கிடைக்கப்பட வேண்டும்.
அந்த வகையில் இந்திய சமுதாயத்தின் மீது எனக்கு தனி அன்பும் மரியாதையும் உண்டு. அவர்களுக்கு நான் எப்போதும் துணை நிற்பேன் என்றார் ஷாஹிட்.
இன்று பாகான் டத்தோ நாடாளுமன்ற தொகுதியில் ஆயிரம் இந்திய மாணவர்களுக்கு கல்வி நிதியை டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி வழங்கினார்.
துணை பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடியின் இந்தியர் அதிகாரி அர்விந்த் அப்பளசாமி ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த விழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

