
கொம்தார், மார்ச் 12-
ஒன்பதாம் ஆண்டாக பினாங்கு தமிழ் வீதி பாரம்பரிய சமூக நல அமைப்பு நடத்திய நோன்பு திறப்பு மற்றும் பெருநாள் அன்பளிப்பு நிகழ்ச்சி யு.எம்.எ. மண்டபத்தில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
பினாங்கு கொம்தார் சட்டமன்ற உறுப்பினர்
தே லை ஹிங் அவர்கள் சிறப்பு வருகை தந்து உரையாற்றினார்
ஏற்பாட்டுக்குழு தலைவர் ஷரீப் இப்ரா ஹிம் வரவேற்று பேசினார்.
தலைவர் முகம்மது அஸ்ரி உரையாற்றினார், இந்த நிகழ்வில் 150 பேர்களுக்கு உதவி பொருட்கள் வழங்கப்பட்டது.

பினாங்கு மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ ராஜா, பெலித்தா குழுமத்தின் தலைவர் டான்ஸ்ரீ ரமேஷ் ,டத்தோ K.சஹாபுதீன், டத்தோ உஸ்வத், டத்தோ அப்துல் அஜீஸ், டத்தோ முஹம்மது யூசுப், டத்தோ முஹம்மது முஹ்சின், டத்தோஸ்ரீ அஜ்மல், டத்தோ அஸ்லான், டத்தோ சமீட், டத்தோ காதிர்ஷா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தஹ்பீஸ் பிள்ளைகள் துஆ ஓதினார்கள்.

