இந்திய சமுதாயம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளை பிரதமர் நேரடியாக கண்காணிக்க வேண்டும்! டாக்டர் குணராஜ்

கோலாலம்பூர் ஆக 18-
நாட்டில் உள்ள இந்திய சமூகத்தின் விவகாரங்களையும் சமூக பொருளாதார வளர்ச்சியையும் நிர்வகிக்கும் அமைப்பை பிரதமரும் கெஅடிலான் தலைவருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேரடியாக வழிநடத்த வேண்டும்.

இதை வலியுறுத்தி 24 இந்திய கெஅடிலான் தொகுதித் தலைவர்களில் பதினேழு பேரும் கட்சியின் உச்சமன்ற உறுப்பினர் ஒருவரும் பிரதமருக்கு ஒரு அதிகாரப்பூர்வ கடிதத்தை சமர்ப்பித்துள்ளனர்.

மலாக்காவில் நடைபெற்ற கட்சியின் பேராளர் மாநாட்டின் போது, ​​செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் அந்தக் கடிதத்தை டத்தோஸ்ரீ அன்வாரிடம் வழங்கினார்.

டத்தோஸ்ரீ அன்வாரிடம் இந்த கடிதத்தை நேரடியாக அன்வாரிடம் வழங்கியதை குணராஜ் உறுதிப்படுத்தினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles