

தனது பத்துகாஜா நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள 31 பள்ளிவாசல்கள், சூராவ்களுக்கு தலா 5 ஆயிரம் வெள்ளி என மொத்தம் 1 லட்சத்து 55,000 வெள்ளியை வழங்கி மனித வள அமைச்சர் வ சிவகுமார் நேற்று உதவி புரிந்தார்.
நோன்பு காலத்தில் மக்கள் பயன் பெறும் நடவடிக்கைகளுக்கும் பள்ளிவாசல்களின் மேம்பாட்டு பணிகளுக்காக இந்நிதி வழங்கப்பட்டதாக அவர் சொன்னார்.
இது போன்ற நிதி வழங்கும் நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறும் என்று பத்து காஜா கிந்தா மாநகர் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டபோது அவர் இதனை தெரிவித்தார்.

