
மனித வள அமைச்சர் வ. சிவகுமார் மரியாதை நிமித்தமாக கம்போடியா தலைநகர் Phnom Penh இன்று காலை வந்தடைந்தார்.
விமான நிலையத்தில் அமைச்சர் சிவக்குமாருக்கு இந்திய வர்த்தக பிரமுகர் டாக்டர் சீராஜூடின் பாலை அணிவித்து வரவேற்றார். மலேசிய தூதரக அதிகாரிகளும் இதில் கலந்து கொண்டனர்.
இன்று கம்போடியா அரசுடன் மனித வளம் தொடர்பில் சிவகுமார் பேச்சுவார்த்தையை நடத்துவார்.
நாளை கம்போடியா வந்தடையும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான பேராளர் குழுவுடன் மனித வள அமைச்சர் சிவகுமாரும் இணைந்து கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

