
நாளை கொண்டாடப்படும் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு காப்பார் ஐபிஎப் கட்சியின் சார்பில் 28 ஆம் ஆண்டாக தண்ணீர் பந்தல் காப்பார் பால தண்டாயுதபாணி ஆலயத்தில் அமைக்கப்பட்டு 1,500 பக்தர்கள் தாகம் தீர்க்க சுவையான பானங்கள் வழங்கப்படுகிறது.
மேலும் பக்தர்களுக்கு சுவையான அன்னதானமும் வழங்கப்படுகிறது என்று சிலாங்கூர் மாநில ஐபிஎப் கட்சியின் தலைவரும் காப்பார் ஐபிஎப் தொகுதி தலைவருமான இங்கிரேசன் தெரிவித்தார்.
ஐபிஎப் கட்சியின் தேசிய தலைவர் டத்தோ லோகநாதன் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள் என்று அவர் சொன்னார்.

