

எஸ்பிஎம் தேர்வில் சிறப்பு தேர்ச்சி பெற்ற இந்திய மாணவர்களுக்கு உதவும் வகையில் beyond education நிறுவனத்தின் சார்பில் இன்று பெட்டாலிங் ஜெயா கீதா ஆசிரமத்தில் கல்வி உபகார சம்பளம் விண்ணப்பம் செய்ய மாணவர்கள் அலையென திரண்டனர்.
மருத்துவம் பயில கல்வி உபகார சம்பளத்திற்கு விண்ணப்பம் செய்யலாம் என்று Beyond education நிறுவனத்தின் இயக்குநர் விக்னேஷ் கிருஷ்ணகுமார் வேண்டுகோளை ஏற்று எஸ்பிஎம் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்களுக்குரிய பல்கலைக்கழகங்களை தேர்வு செய்ய பெரும் அளவில் திரண்டனர்.
பத்துக்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் இன்றைய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு விளக்கம் அளித்தன.
மாணவர்களும் தங்களுக்குரிய பல்கலைக்கழகங்களை தேர்வு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

