

பட்டர்வொர்த், ஜூலை 15-
பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் கீழ் இயங்கும் பட்டர் வொர்த் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலுக்கு மனிதவள அமைச்சர் வ சிவகுமார் இன்று 20,000 வெள்ளி மானியத்தை வழங்கினார்.
கோவிலுக்கு சிறப்பு வருகை புரிந்த மனிதவள அமைச்சர் சிவகுமாருக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு செய்யப்பட்டது.
பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சதீஷ் முனியாண்டி உட்பட பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் பொறுப்பாளர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

