மனிதவள துறைகள் எவ்வாறு செயல்படுகிறது என்பதை தெரிந்து கொள்ள பேராக் மாநில மனிதவளத் துறைக்கு அமைச்சர் சிவகுமார் நேரடி வருகை!

ஈப்போ செப். 13-
பேராக், ஈப்போவில் உள்ள Bangunan Persekutuan Ipoh, Perak கட்டிடத்தில் அமைந்துள்ள பேராக் மாநில மனிதவளத் துறைக்கு மனிதவள அமைச்சர் வ.சிவகுமார் இன்று சிறப்பு வருகை புரிந்தார்.

மாநில அளவில் மனிதவள துறைகள் மற்றும் நிறுவனங்களின் அதிகாரிகளைச் சந்திக்க சென்றது இது மூன்றாவது மாநிலம் இதுவாகும்.
இதற்கு முன் நான் சபா மற்றும் சரவாக் மாநிலங்களுக்கு சென்றதாக அவர் சொன்னார்.

KSM இன் கீழ் உள்ள துறைகள் மற்றும் நிறுவனங்களின் அதிகாரிகளை இன்னும் நெருக்கமாக அறிந்துகொள்ள இந்த வாய்ப்பைப் பயன்படுத்த விரும்புகிறேன்.

அதே நேரத்தில், மனிதவள துறைகள் எவ்வாறு செயல்படுகிறது மற்றும் அந்தந்த மாநில அளவில் தொடர்புடைய சிக்கல்கள் பற்றிய தெளிவான விளக்கங்களை பெற விரும்புகிறேன் என்றார் அவர்.

பேராக் மாநிலத்தில் உள்ள அனைத்து துறைகள் மற்றும் ஏஜென்சிகளால் மேற்கொள்ளப்பட்ட அணுகுமுறை மற்றும் ஒத்துழைப்பு என்னை மிகவும் கவர்ந்துள்ளது.

இங்குள்ள மக்களுக்கு சிறந்த சேவையை வழங்க இந்த முயற்சிகள் தொடரும் என நம்புகிறேன் என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles