இந்திய பாரம்பரிய தொழில் துறைகள் அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ள அக்டோபர் 10ஆம் தேதி முதல் விண்ணப்பம் செய்யலாம்! மனிதவள அமைச்சர் சிவகுமார் அறிவிப்பு

கோலாலம்பூர், அக்.2-
கடந்த செப்டம்பர் 4 ஆம் தேதி பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்கள் இந்திய பாரம்பரிய தொழில் துறைகளில் வேலை செய்ய அந்நியத் தொழிலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று அறிவித்தார்.
இதனை தொடர்ந்து செப்டம்பர் 8 ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்திய பாரம்பரிய தொழில் துறைகளில் 7,500 அந்நிய தொழிலாளர்கள் வேலை செய்ய அனுமதி வழங்கப்பட்டது என்று மனிதவள அமைச்சர் வ. சிவகுமார் சொன்னார்.
14 ஆண்டுகளாக இந்திய பாரம்பரிய தொழில் துறைகள் அந்நிய தொழிலாளர் இல்லாததால் பெரும் பாதிப்பை எதிர் நோக்கி வந்தனர்.

இப்போது 7,500 அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருப்பதால் இந்திய பாரம்பரிய தொழில் துறைகளுக்கு புதிய விடிவுகாலம் பிறந்துள்ளது என்றும் வரும் அக்டோபர் 10ஆம் தேதி முதல் விண்ணப்பம் செய்யலாம் என்று அமைச்சர் சிவகுமார் மகிழ்ச்சியோடு தெரிவித்தார்.

அமைச்சரவையின் முடிவைத் தொடர்ந்து, அரசாங்கம் மூலம் மனிதவள அமைச்சு (KSM) உள்துறை அமைச்சு (KDN) மற்றும் உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சு (KPDN) விண்ணப்பம் நெறிமுறையை விவரிக்க ஒரு விவாதத்தை நடத்தியது என்றார்.
சம்பந்தப்பட்ட 3 தொழில் துறைகளுக்கான வெளிநாட்டு பணியாளர் விண்ணப்பம், செயல்முறை. பயன்பாட்டின் நிபந்தனைகளை அமைச்சர் சிவகுமார் இன்று அறிவித்தார்.

அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ள விரும்பும் முதலாளிகள் விண்ணப்பம் செய்ய வேண்டும்.
(Permohonan: akan dibuat oleh majikan)

Jabatan Imigresen Malaysia எனப்படும் தேசிய குடிநுழைவுத் துறை பதிவில் இருக்க வேண்டும். (Kuota 7,500 pekerja jumlah kuota ini termasuk jumlah pekerja asing sedia ada yang bekerja di dalam 3 sub sektor berkenaan berdasarkan kepada rekod Jabatan Imigresen Malaysia)

பொற்கொல்லர்கள் மற்றும் ஜவுளித் தொழிலாளர்களின் துணைத் துறைக்கு அளவுகோல்கள் மற்றும் தகுதிகள்.

  • தரைப்பகுதி ஒரே மாதிரியாகவோ அல்லது அதிகமாகவோ இருந்தால் 1,000-சதுர மீட்டர் முதல் 5,000-சதுர மீட்டர் வரை, மொத்த உள்ளூர் பணியாளர்கள் எண்ணிக்கையில் 15% அந்நிய தொழிலாளர்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
  • தரைப்பரப்பு 200-க்கு சமமாக அல்லது அதற்கு மேல் இருந்தால் சதுர மீட்டர் 999 குறைவாக இருந்தால் 3 முதல் 4 பேர் வழங்கப்படும்.

பணியாளர்; மற்றும்

  • தரைப்பகுதி 199-மீட்டருக்கு மேல் இல்லை என்றால்
    2 தொழிலாளர்கள் வழங்கப்படும்.

முடித்திருத்தும் நிலையங்களில் 3 இருக்கைகள் இருந்ததால் 1 உள்ளூர் தொழிலாளி மற்றும் 2 அந்நியத் தொழிலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும்.

(Bagi sub sektor tukang gunting rambut:

  • bilangan 3 kerusi iaitu (1 pekerja tempatan: 2 pekerja
    asing); dan
  • pengusaha diwajibkan mempunyai Sijil Kemahiran
    Malaysia (SKM) yang diiktiraf oleh Kerajaan.)

புதிய அந்நியத் தொழிலாளர்கள் 10 ஆண்டுகள் முதல் கூடுதலாக மேலும் 3 ஆண்டுகள் வேலை செய்ய அனுமதி வழங்கப்படும்.

(Tempoh Penggajian:
(a) bagi pekerja asing baharu:

  • tempoh penggajian adalah mengikut dasar semasa iaitu 10
    tahun + 3 tahun.)

தற்போதுள்ள வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு:
தற்காலிக பணி வருகை பாஸ் புதுப்பித்தல் விண்ணப்பம் வரும் 10 அக்டோபர் 2023 (செவ்வாய்கிழமை) தொடங்குகிறது.
(bagi pekerja asing sedia ada: permohonan pembaharuan Pas Lawatan Kerja Sementara
(PLKS) boleh dibuat oleh majikan bagi pekerja di bawah kategori ini bermula 10 Oktober 2023 (Selasa).

அதேசமயம் 10 அல்லது மேலும் 3 ஆண்டுகள் கூடுதலாக வேலை செய்த அந்நிய தொழிலாளர்கள் கண்டிப்பாக நாடு திரும்ப வேண்டும் என்று அவர் சொன்னார்.

முடி திருத்துபவர்கள், நகைக்கடைக்காரர்கள் மற்றும்
ஜவுளி நிலையங்களுக்கு KSM மற்றும் JTKSM இணையதளங்கள் மூலமாக விண்ணப்பத் தேவைகள் மற்றும் பணியாளர் வேலைவாய்ப்பு செயல்முறை பற்றிய அறிவிப்பு KSM இன் சமூக ஊடகப் பக்கத்தில் பதிவேற்றப்படும் என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles