
எம் சி ஐ எஸ் நிறுவனத்தின் 70 ஆண்டு கால பொருளாதார வளர்ச்சி
மலேசியாவில் இன்சூரன்ஸ் சேவையில் ஈடுபட்டு இந்திய சமூக மேம்பாட்டிற்கு பல வாய்ப்புகளை வழங்கி வரும் எம் சி ஐ எஸ் கூட்டுறவு நிறுவனம் அண்மையில் தனது 70 வது ஆண்டு விழாவை ஒட்டி இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்தது இங்கு கருத்து தெரிவித்த எம் சி ஐ எஸ் கூட்டுறவு தலைவரும் சென் ஜோசப் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் குணராஜ் இந்த கூற்றுவனத்தின் நிறுவனர் குழு ராஜா அவர்களுக்கு மிக்க நன்றி அவரது நூறாவது பிறந்தநாளில் அவர் இந்த இந்திய சமூகத்திற்கு ஆற்றிய பல சேவைகளில் இந்த கூட்டுறவு நிறுவனத்தை ஆரம்பித்தது ஒரு சிறப்பான சேவையாகும் என அவருக்கு தனது நன்றிகளை டாக்டர் குனராஜ் தெரிவித்து கொண்டார். எஸ் டி எம் எஸ் டி பி எம் மெட்ரிகுலேஷன் போன்றவற்றில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற எம் சி ஐ எஸ் உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன மொத்தம் 45 பேர் விருந்துகளை பெற்றுள்ளனர் என்று மேலும் குறிப்பிட்டார். அதேபோல் இந்த கூட்டுறவு நிறுவனத்தின் முன்னாள் உறுப்பினர்களையும் மறைந்த முன்னாள் ஊழியர்கள் மற்றும் உறுப்பினர்களின் சேவையை நினைவு கூறும் வகையில் அவர்களது குடும்பத்தினர் நினைவுப் பரிசுகளை பெற்றுள்ளனர். எம் சி ஐ எஸ் கூட்டுறவு வளர்ச்சியில் 70 ஆண்டுகளுக்கு மேலாக தங்களுடன் மேம்பட்ட உறவைப் பேணி வரும் வாடிக்கையாளர் அனைவருக்கும் சந்தோச மாநில சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார். இந்நிகழ்வில் தொழில் முனைவோர் அபிவிருத்தி மற்றும் கூட்டுறவு பிரதி அமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி அவர்களும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

