பத்துகேவ்ஸில் அமைந்திருக்கும்
ஸ்ரீ ஐயப்ப சுவாமி ஆலயம் எதிர்வரும் நவம்பர் 19 மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பத்துகேஸ் ஶ்ரீ ஐயப்ப சுவாமி தேவஸ்தானத்தின் ஏற்பாட்டில் நேற்று இரவுபத்துகேவ்ஸ் …. மண்டபத்தில் ஆலய திருப்பணி நிதி திரட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நாட்டில் ஐயப்ப சுவாமியின் தாய் கோயிலாக விழங்கிவரும் இந்த பத்துமலை ஸ்ரீ ஐயப்ப சுவாமி ஆலயம்சமயசேவை மட்டுமல்லாது சமுதாய சேவையையும் சிறப்புடன் செய்து வருகிறது என நிகழ்ச்சிக்குதலைமையேற்று கலந்து கொண்ட மா.இ.கா தேசிய துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்றஉறுப்பினருமான டத்தோ ஶ்ரீ எம். சரவணன் கூறினார்.
ஆலய நிர்வாகத்தின் இந்த சமயப் பணிகளுடன் சேர்ந்து சமுதாயத்திற்கு செய்துவரும் சமூக சேவைகளும்என்றென்றும் தொடர வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.
மேலும் இந்த ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழா வரும் நவம்பர் மாதத்தில் நடைபெறவிருக்கும் வேளையில்ஆலயத்தில் திருப்பணிகள் சிறந்த முறையில் நடைபெற்று வருகிறது.
ஆலய திருப்பணி, கும்பாபிஷேக விழாவிற்கு நிதி திரட்டும் நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணி சிறப்புடன் செய்துமுடிக்க என்னால் முடிந்த உதவிகளும் செய்வேன்.
பொதுமக்களும் தங்களால் முடிந்த உதவியினை ஆலயதிற்க்கு செய்ய வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
பத்துமலை ஐயப்ப சுவாமி ஆலய திருப்பணி, கும்பாபிஷேக விழாவிற்கு சுமார் 18 லட்சம் ரிங்கிட் மொத்தசெலவு தொகையாகும்.
இறுதிக்கட்டை திருப்பணி வேலைகளுக்கும் கும்பாபிஷேக விழா நடத்துவதற்கும் ஆலய நிர்வாகத்திற்குமேலும் 5 லட்சம் ரிங்கிட் தேவைப்படுகிறது.
இதற்காக ஆலய் நிர்வாகம் பல நிதி திரட்டும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்று ஆலயதலைவர் யுவராஜா கூறினார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் ஆலய நிர்வாகத்தின் சார்பாக சிறுமி ஜாஷினி கோர் அவருக்கு மருத்துவ நிதிஉதவி வழங்கப்பட்டது. மேலும் அந்த சிறுமியின் மருத்துவத்திற்கு 5000 ரிங்கிட் அம்மேடையிலேயேடத்தோ ஶ்ரீ எம். சரவணன் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிதி திரட்டும் விழாவில் ஆலயத் தலைவர் யுவராஜா, துணைத் தலைவர் தமிழ்செல்வம், செயலாளர் ரவிஉட்பட பல முக்கிய பிரமுகர்களும் ஐயப்ப பக்தர்களும் கலந்து சிறப்பித்தனர்.



