
பத்துமலையில் மேற்குகைக்கு மின் படிகட்டு நிர்மானிக்க அடிப்படை பணிகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கோலாலம்பூர் ஶ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஶ்ரீ டாக்டர் ஆர்.நடராஜா அனுமதி கோரியிருப்பதாக சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோஶ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
மின் படிக்கட்டு கட்டும் கோரிக்கையை சிலாங்கூர் மாநில அரசு, செலயாங் நகராண்மைக் கழகம், நிலஅலுவலகம் என அனைத்தும் முழு ஆதரவை தருகிறது.
இதேவேளையில் இந்த மின் படிகட்டு நிர்மாணிப்பு திட்டத்திற்கு சுற்றுச் சூழல் துறையின் அனுமதியும் பெறவேண்டும்.
இத்திட்டதிற்கு அதன் அனுமதியும் கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. அதன் அனுமதி கிடைத்தவுடன் சிலாங்கூர் மாநில அரசு இத்திட்டத்திற்கான துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளபடும் என்று டத்தோஶ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

