
நாட்டின் 15 ஆவது பொதுத் தேர்தலில் பேராக் மாநிலத்தில் உள்ள தம்பூன் நாடாளுமன்றத் தொகுதியில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் போட்டியிடுகிறார்.
பேராக் மாநிலத்தில் தேசிய முன்னணி கைவசம் உள்ள தொகுதிகளை பக்கத்தான் ஹரப்பான் கைப்பற்றும் முயற்சியில் இம்முறை பேராக்கில் போட்டியிடுகிறேன்.
பேராக் மாநில மக்களை நம்மோடு இணைந்து எதிரிகள் கைவசம் உள்ள தொகுதிகளை கைப்பற்றி சாதனைப் படைக்க உற்சாகத்துடன் களத்தில் இறங்குவோம் என்று நேற்று நடைபெற்ற பக்கத்தான் ஹரப்பானின் மாபெரும் பிரச்சார கூட்டத்தில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முழங்கினார்.

