
தீபாவளி பண்டிகையை காலத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் விழிப்புடன் இருக்கும்படி மலேசியா தீயணைப்பு இலாகா கேட்டுக் கொள்கிறது.
தீபாவளி காலத்தில் தீ விபத்து ஏற்படாமல் இருக்க பொதுமக்கள் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும்.
கடந்த 2021 ஆம் ஆண்டில் கூட்டரசு பிரதேசத்தில் 1,400 தீ விபத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதில் 5 பேர் பலியான வேளையில் 28 பேர் காயமுற்றனர்.
இந்த தீ விபத்தால் 6 கோடியே 10 லட்சம் வெள்ளி சேதம் ஏற்பட்டுள்ளது.
நேற்று செந்தூல் வட்டாரத்தில்
சிறந்த சமூக சேவையாளர் மற்றும் சமாதான நீதிபதி இயக்கத்தின் கோலாலம்பூர் மன்றத் தலைவர் டத்தோ பஞ்சமூர்த்தி ஜே.பி. ஏற்பாட்டில் தீபாவளியை முன்னிட்டு தீயணைப்பு பாதுகாப்பு நடவடிக்கை குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது.

