
பினாங்கு பிப் 22-
தெலுக் பகாங், ஸ்ரீ சிங்கமுக காளியம்மன் கோவிலில் நடைபெறவிருக்கும் ‘தெப்ப திருவிழாவிற்கு பினாங்கு இந்து அறப்பணி வாரியம் தனது ஆதரவை தெரிவித்துள்ளது.
அனைத்து பக்தர்களும் விழாக்களில் பங்கேற்பதை உறுதி செய்வதற்காக, பிப்ரவரி 24, 2024 அன்று நடக்கும் நிகழ்வின் போது தஞ்சோங் புங்கா மார்க்கெட்டில் இருந்து கோவிலுக்கு பேருந்து சேவையை வழங்க ரேபிட் பினாங்குடன் இந்து அறப்பணி வாரியம் இணைந்துள்ளது.
பினாங்கு இந்து அறப்பணி வாரியம் RM 4,823.00 வழங்கி பேருதவி புரிந்துள்ளது.
பகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் மற்றும் செனட்டர் லிங்கேஸ்வரன் நேற்று இந்த நிதியை கோவில் பொறுப்பாளர்களிடம் ஒப்படைத்தார்

