
ஷா ஆலம், மார்ச் 2-
பண்ணைக்கு வெளியே தங்கள் கால்நடைகளைச்
சுற்றித் திரியவிடும் கால்நடை வளர்ப்போருக்கு விதிக்கப்படும் அபராதம்
பத்து மடங்காக அதிகரிக்கப்படும்.
இத்தகைய குற்றங்களைப் புரிவோருக்கு தற்போது விதிக்கப்படும் 1,000
வெள்ளி கூடுதல் பட்ச அபராதத் தொகையை 5,000 வெள்ளி முதல் 10,000
வெள்ளி வரை உயர்த்துவதற்கு ஏதுவாக 1971ஆம் ஆண்டு மாநில
கால்நடை கட்டுப்பாட்டுச் சட்டத்தில் திருத்தம் செய்ய மாநில அரசு
நடவடிக்கை எடுத்து வருவதாக ஊராட்சி மன்றங்களுக்கான ஆட்சிக்குழு
உறுப்பினர் டத்தோ இங் சுயி லிம் கூறினார்.

