
ஷா ஆலம், மார்ச் 15-
இன்று மார்ச் 15 முதல் ஏப்ரல் 15 வரை RM5,000 மற்றும் அதற்கும் குறைவான வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த சிலாங்கூரில் பிறந்த உயர்கல்விகூட மாணவர்கள் RM1,000 ரொக்க ஊக்க தொகைக்கு விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.
இந்த உயர்கல்வி உதவித்தொகை திட்டம் (HPIPT) 3,000 மாணவர்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது . விண்ணப்பப் படிவத்தை https://edanapendidikan.selangor.gov.my ஐ மூலம் பூர்த்தி செய்யலாம்.

