
அரசாங்கத்தின் இலக்கிடப்பட்ட மானியம் அல்லது
உதவிகளைப் பெறுவதிலிருந்து விடுபடாமலிருக்க “பாடு“ எனப்படும்
முதன்மை தரவுத் தள முறையில் விரைந்து பதிவு செய்து கொள்ளும்படி
18 வயதுக்கும் மேற்பட்டவர்கள் குறிப்பாகக் குடும்பத் தலைவர்கள் கேட்டுக்
கொள்ளப்பட்டுள்ளனர்.
எதிர்காலத்தில் அரசாங்கம் வழங்குகின்ற உதவிகள் சரியான தரப்பினரைச்
சென்று சேர்வதை உறுதி செய்வதில் இந்த குடும்ப விபர புதுப்பிப்பு
அவசியமாவதாக சிலாங்கூர் மாநில புள்ளி விபரத் துறையின் இயக்குநர்
ஹரித்தினி யாக்கோப் கூறினார்.

