
முன்னாள் கைதிகளை வேலைக்கு அமர்த்துவதற்கான நடவடிக்கையை சிலாங்கூர் மாநில மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்பு துறைக்கான மாநில ஆட்சிக்குழு மேற்கொண்டு வருகிறது என்று அதன் ஆட்சிக் குழு உறுப்பினர் ராயுடு தெரிவித்தார்
நாட்டில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறை பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு மட்டுமின்றி கைதிகள் புதிய வாழ்க்கையைத் தொடங்குவதற்கான இரண்டாவது வாய்ப்பையும் வழங்கும்.
அதே வேளையில் , சிறைச்சாலைத் துறையும் முதலாளிமார்கள் அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்குப் பதிலாக நன்னடத்தை காரணமாக தண்டனை காலம் முடிவதற்கு முன்னரே விடுதலையானவர்கள்.
பரோல் கண்காணிப்பில் உள்ளவர்கள் மற்றும் அனுமதியோடு விடுதலையானவர்கள் ஆகியோரை வேலைக்கு அமர்த்துவதை ஊக்குவிக்கிறது என்றார் அவர்.

