
புத்ரா ஜெயா மார்ச் 22-
வரவிருக்கும் Aidilfitri பெருநாளில் அதரவற்ற பிள்ளைகள் மற்றும் வசதி குறைந்த குடும்பங்கள் கொண்டாடும் வகையில் program kebajikan ‘Prihatin Madani’ என்ற நலத்திட்டத்தை நடத்துவதற்கு MYNIC பெர்ஹாட் மற்றும் அவரது குழுவின் தலைமை நிர்வாக அதிகாரி Datuk Ts Hasnul Fadhly Hasan உடன் கலந்துரையாடல் நடைபெற்றது.
Pusat Khidmat Parlimen Damansara சேவை மையம் எப்போதும் மற்றவர்களுக்கு உதவுவதற்கும் அவர்களின் மகிழ்ச்சியை உறுதிப்படுத்துவதற்கும் உறுதிபூண்டுள்ளது என்று டமான்சாரா நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் மாண்புமிகு சுரேஷ் சிங் தெரிவித்தார்.
இன்று நடத்தப்பட்ட கலந்துரையாடல் நல்ல பலனை தந்ததாக அவர் சொன்னார்.
டமான்சாரா நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் டிஜிட்டல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ எப்போதும் தொகுதி மக்களுக்கு தன்னலம் கருதாமல் உதவி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

