
15வது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக பாரிசான் நேசனல், பக்காத்தான் ஹராப்பான் மற்றும் பெரிகாத்தான் நேசனல் ஆகிய கட்சிகளின் பிரதமர் வேட்பாளர்களிடையே விவாதம் நடத்த அன்வார் இப்ராஹிமின் அழைப்பை பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நிராகரித்துள்ளார்.
விவாதங்கள் மலேசியாவின் அரசியல் கலாச்சாரத்தின் ஒரு பகுதி அல்ல என்று இஸ்மாயில் கூறினார்.
“நாங்கள் விவாதம் செய்தால், அன்வார் தனது வாக்குறுதிகளைப் பற்றி பேசுவார், சந்திரன் மற்றும் நட்சத்திரங்கள் போன்றவற்றை அவர் வாக்குறுதிகளாக வைந்திடுவார்,
எனவே விவாதம் செய்ய தேவையில்லை,” என்று அவர் கூறினார்.

