
கடந்த காலங்களை போல் இல்லாமல் மஇகா தலைவர்கள் தற்போது ஒற்றுமையுடன் கட்சியை வழி நடத்தி வருகின்றனர்.
ஆனால், அந்த ஒற்றுமையை சீர்குலைக்கும் முயற்சியில் முக்கிய தலைவர் ஒருவர் நாரதர் வேலையை செய்து வருகிறார்.
தொடக்க காலத்தில் மஇகாவில் பல பிளவுகள் இருந்தன. ஆனால், தற்போது அனைவரையும் அரவணைத்து அக்கட்சி ஒற்றுமையாக செயல்பட்டு வருகிறது.
அதனை சகித்து கொள்ள முடியாமல் அந்த தலைவர் சூழ்ச்சிகளை கட்டவிழ்த்துள்ளார்.
மஇகா ஒரு ஆழமரம். நேற்று மழையில் பூத்த காளான் அல்ல.
என்ன தான் நாரதர் வேலை செய்தாலும் மஇகாவை அசைத்து கூட பார்க்க முடியாது.
எனவே, சதி திட்டத்தை கொளுத்தி போடும் வேலையை அத்தலைவர் இத்தோடு நிறுத்தி கொள்ள வேண்டும் என மஇகாவின் அடிமட்ட தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.

