
கோலாலம்பூர் ஏப்ரல் 7-
பிரபல காலணி நிறுவனம் ஒன்று தயாரித்து விற்பனையில் இருக்கும் காலணியில் சமயம் சார்ந்த சின்னம் இருப்பதாக கூறப்பட்ட விவகாரம் தொடர்பில் போலீஸ் துறை 8 புகார்களை பெற்றுள்ளது.
குற்றவியல் சட்டத்தின் பிரிவு 298 மற்றும் தகவல் தொடர்பு மல்டிமீடியா சட்டம் 1998 இன் பிரிவு 233 ஆகியவற்றின் கீழ் விசாரணை அறிக்கை திறக்கப்பட்டு இருப்பதாக போலீஸ் படை தலைவர் டான்ஸ்ரீ ரஸாரூடின் ஹூசேன் தெரிவித்தார்.
மலேசியா கினி

