
செ.வே. முத்தமிழ் மன்னன்
கோலாலம்பூர் ஏப்ரல் 8-
நாட்டில் மலேசிய மருத்துவ மன்றம் மிகப்பெரிய அளவில் மறு சீரமைக்க பட வேண்டும் என ஜசெக செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன் கோரிக்கையை முன் வைத்துள்ளார்.
மலேசிய மருத்துவ மன்றத்திற்கு எதிராக மூன்று வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.
இதனால் அந்த மன்றம் உடனடியாக மறு சீரமைப்பு செய்யப்பட வேண்டும்.
மலேசிய மருத்துவ மன்றத்தில் தலைமை செயல் முறை அதிகாரி இன்னும் ஏன் நியமிக்கப்படவில்லை.
ஓராண்டு ஆகியும் இந்த பதவி காலியாக உள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

