உச்சத்தில் இருக்கும் கால்பந்து துறையில் முத்திரை பதிக்கும் பினாங்கு இந்திய பெண்கள் அணி!

செ.வே. முத்தமிழ் மன்னன்

பினாங்கு, ஏப்ரல் 8-
உலக அளவில் கால்பந்து இப்போது உச்சத்தில் உள்ளது. மலேசியாவில் நிறைய இந்திய பெண்கள் கால்பந்தைக் கற்றுக்கொள்ள விரும்புகிறார்கள்.

இவர்களுக்கு பெற்றோர்கள் மிகவும் ஆதரவளிக்கிறார்கள் . மேலும் பெண்கள் கால்பந்து விளையாட அனுமதிக்கிறார்கள் என்று பினாங்கு இந்தியர் கால்பந்து சங்கத்தின் தலைவர் ஸ்ரீ சங்கர் தெரிவித்தார்.

இப்போது பினாங்கு இந்தியன் எஃப் .சி. கிளப்பில் 20 மூத்த வீரர்கள் (வயது 18 – 47 வயது) மற்றும் 40 ஜூனியர் வீரர்கள் (வயது 8 – 13 வயது) இடம் பெற்றுள்ளனர்.

கடந்த மாதம் மலாக்காவில் நடந்த MIFA ஜூனியர் தேசிய கால்பந்து போட்டியில் பினாங்கு இரண்டாம் இடத்தைப் பிடித்தது.

இந்த ஆண்டு சிலாங்கூர் 15 வயதுக்கு உட்பட்ட லிகா லீக் ஜோகூரில் 16 வயது பெண்கள் கால்பந்து போட்டிகள் நடைபெறுகின்றன.

பினாங்கில் 8 வயதுக்குட்பட்ட, 10 வயதுக்குட்பட்ட மற்றும் 12 வயதுக்கு உட்பட்டோருக்கான லிகா அகாடமி போலா செப்பாக் போட்டிக்கும் தயாராகி வருகிறோம்.

அணிகள் மற்றும் பெண் விளையாட்டாளர் களுக்கு ஆதரவளிக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம் என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles