
கோலாலம்பூர், ஏப்.10
புனிதமான ரமலான் மாதத்தில் 30 நாட்கள் நோன்பிருந்து, பசியை உணர்ந்து, இறைசக்தியையும் பூரணமாகஅனுபவித்து, ஹரிராயா நோன்புப் பெருநாளைக் கொண்டாடவிருக்கும் முஸ்லீம் அன்பர்கள் அனைவருக்கும் ம.இ.கா. தேசிய தலைவர் டான்ஶ்ரீ ச.விக்கினேஸ்வரன் ஈகைத் திருநாள் வாழ்த்துகளை தேரிவித்துக் கொண்டார்.
பல இன மக்கள் ஒற்றுமையாக வாழும் நம் நாட்டில் ஒவ்வொரு பெருநாளும் மகிழ்ச்சியாக ஒன்றுகூடி கொண்டாடும் பண்பே நம் நாட்டின் தனி சிறப்பு அம்சமாகும்.
பெருநாள் விடுமுறைகளின்போது வாகனங்களில் வெளியூர்களுக்குப் பயணம் செய்பவர்கள் பாதுகாப்புடன்செல்லுமாறும், சாலைகளில் பொறுமையையும், கவனத்தையும் கடைப்பிடிக்குமாறும் அவர் நினைவுறுத்தினார்.
மஇகாவின் சார்பிலும், தனது தனிப்பட்ட சார்பிலும் தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் மீண்டும் இனிய நோன்புப்பெருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

