
செ.வே.முத்தமிழ் மன்னன்
கோலாலம்பூர் ஏப்ரல் 14-
கோலாலம்பூர் ஜாலான் கெனாங்கா பிளாட் ஸ்ரீ சரவாக்கில் வசிக்கும் மைபிபிபி உறுப்பினர்களான திரு. பி. பப்பன் மற்றும் திருமதி. சுசீலா ஆகியோருக்கு புக்கிட் பிந்தாங் மைபிபிபி மகளிர் அணி தலைவி திருமதி நளினி சுரேஸ் தலைமையில் உணவுக் கூடைகள் வழங்கப்பட்டது.
இந்த இரண்டு அறைகள் கொண்ட வீட்டில் 12 பேர் வசிக்கின்றனர் இதில் 7 பேரக்குழந்தைகளும் அடங்குவர். 90 வயது மற்றும் உடல் நலக்குறைவு கொண்ட திரு. பாப்பனின் தந்தைக்கு பயன்படுத்த பொருட்களும் வழங்கப்பட்டது.
நாங்கள் வழங்கிய இந்த உதவிகள் அவர்களின் செலவுகளை கொஞ்சம் குறைக்கும் என்று நளினி சுரேஸ் தெரிவித்தார்.

