இந்திய அரசின் கல்வி வாய்ப்புக்களைநல்ல முறையில் பயன்படுத்தி கொள்ளுங்கள்!மாணவர்களுக்கு வேண்டுகோள்

செ.வே. முத்தமிழ் மன்னன்

கோலாலம்பூர் மே 1-
இந்திய அரசின் உயர் கல்வி வாய்ப்புகளை மலேசிய இந்திய மாணவர்கள் நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று ஶ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் துணை இயக்குநர் சுரேந்திரன் கந்தா கேட்டுக் கொண்டார்.

மலேசியா மாணவர்கள் பயன்பெறும் வகையில் இந்திய அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் பல வாய்ப்புகளை வழங்கி வருகிறது.

இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் கல்வி உபகார சம்பளத்துடன் இந்த வாய்ப்புகள் வழங்கப்படுகிறது.

குறிப்பாக அந்த நாட்டின் முன்னணி பல்கலைக்கழகங்களில் இந்த வாய்ப்புகள் வழங்கப்படுகிறது.

இந்த வாய்ப்புகளை மலேசிய இந்திய மாணவர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

கிடைக்கும் கல்வி வாய்ப்பு இடங்களை முழுமையாக பூர்த்தி செய்யும் பட்சத்தில் வரும் காலங்களில் இன்னும் அதிகமான இடங்கள் நமக்கு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

அதுவே பூர்த்தி செய்யப்படவில்லை என்றால் கிடைக்கும் வாய்ப்புகள் கூட வரும் காலத்தில் இல்லாமல் போய்விடும் என்று அவர் எச்சரித்தார்.

ஆகவே இந்த விவகாரத்தில் பெற்றோர்களும் மாணவர்களும் மிகக் கவனமாக சிந்தித்து செயல்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் ஏற்பாட்டில் இந்திய அரசு வழங்கும் கல்வி வாய்ப்புகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

மலேசியாவுக்கான இந்திய தூதரகத்தின் கவுன்சிலர் சுஷ்மா இதில் கலந்துகொண்டு உரையாற்றினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles