
உலு சிலாங்கூர், மே 1- சிலாங்கூரில் வரும் ஜூலை மாத த்திற்குள் பரம ஏழ்மை நிலையை ஒழிக்க மாநில அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாக மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
மாநிலத்தில் பரம ஏழைகள் பிரிவில் 861 குடும்பங்கள் உள்ளதாக கூறிய அவர், சிலாங்கூர் மாநில மேம்பாட்டு நடவடிக்கை மன்றம் அளித்த விளக்கத்தின் அடிப்படையில் இந்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.
மாதம் 300 வெள்ளி உதவித் தொகை வழங்க வகை செய்யும் பிங்காஸ் எனப்படும் சிலாங்கூர் நல்வாழ்வு உதவித் திட்டத்தின் கீழ் உபரி நிதியை சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கும்படி மாநில பொருளாதார நடவடிக்கை மன்றம் பணிக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.
சிலாங்கூர் கினி

