
காளிதாஸ் சுப்ரமணியம்
கோலகுபு பாரு மே 5- ஒற்றுமை அரசாங்கம் மக்களுக்கு குறிப்பாக குறைந்த (B40) மற்றும் நடுத்தர (M40) வருமானம் உள்ளவர்கள் குழுவிலிருந்து குடிமக்கள் மீட்சி பெற உதவுவதில் உறுதியாக உள்ளது.
சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறுகையில், ஒவ்வொரு திட்டமும் நன்கு ஒழுங்கமைக்க பட்டதாகவும், புத்ராஜெயா ஒரு நிலையான அரசாங்கத்தால் வழிநடத்தப் படுவதால் முயற்சிகள் இலக்கை அடைய முடியும் என்றார்..
“பி40 மற்றும் எம்40 வருமான வரம்புகளில் மக்கள் சிக்கித் தவிப்பதைத் தவிர்க்க அரசாங்கம் இப்போது முயற்சிக்கிறது. நாங்கள் அரசு ஊழியர்களின் (சம்பள உயர்வில்) இதனை தொடங்குகிறோம், தனியார் துறையும் அதைப் பின்பற்றும் என்று நம்புகிறோம் என்று தெரிவித்தார்.

