
கோலாலம்பூர் மே 12-
தாய் தன் பிள்ளைகள் மீது வைத்திருக்கும் அன்பிற்கு அளவே கிடையாது.
உலகில் உள்ள அனைத்து உயிரினங்களும் தன் பிள்ளைகள் மீது அதிக பாசமும், அன்பையும் வைத்திருக்கும
அன்னை தனது பிள்ளைகள் மீதும் தனது குடும்பத்தின் மீதும் அள்ளித் தரும் அளவிட முடியாத அன்பை, அவா்களின் ஒப்பற்ற பங்களிப்புகள் மற்றும் அவா்களின் தன்னலமற்றத் தியாகத்தை கொண்டாடுவதே அன்னையா் தினம் ஆகும்.
அம்மா என்ற சொல்லை உச்சாிக்கும் போது நம் அனைவருடைய உள்ளங்களும் உணா்ச்சி மிகுதியால் தத்தளிக்கின்றன.
அன்னையின் அன்பு தனித்துவமானது. மற்ற எவரோடும் அன்னையின் அன்பை ஒப்பிட முடியாது.
இந்த ஆண்டு உலகம் முழுவதும் அன்னையர் தினம் மே மாதம் 12-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகின்றது. ஆகவே இத்தகைய அன்னையர் தினத்தன்று நமது தாயாரை வாழ்த்தும் வகையில் இந்த பதிவில் அன்னையர் தினம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் என்று மலேசிய இந்திய டாக்சி கொமுனிகேஷன் ஓட்டுநர் சங்கத்தின் தலைவர் முத்து தெரிவித்தார்.

