குற்றச்சாட்டை ரத்து செய்ய இன்ஸ்பெக்டர் ஷீலா தாக்கல் செய்த மனு நிராகரிப்பட்டது!

கோலாலம்பூர், மே 16-
தனக்கு எதிரான குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி இன்ஸ்பெக்டர் ஷீலா தாக்கல் செய்த மனு அரசு தரப்பால் நிராகரிக்கப்பட்டது.

இந்த வழக்கிற்கு தலைமை தாங்கிய அரசு துணை வழக்கறிஞர் ஹமிசா ஹிசான் இன்ஸ்பெக்டர் ஷீலாவின் மனுவை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிராகரிப்பதாகத் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் ஷீலா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.மனோகரன் அதே தேதியில் புத்ராஜெயாவின் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மற்றொரு வழக்கில் ஆஜராக வேண்டியிருந்ததால், புதிய விசாரணை தேதியை நிர்ணயம் செய்யுமாறு கோரினார்.

நீதிமன்றம் முன்பு ஜூன் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளை விசாரணை தேதியாக நிர்ணயித்தது.

kosmo

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles